Saturday, January 29, 2011

இன்னுமா உறக்கம்?!

காலையில் சாலையில்
அடிபட்ட நாய்க்கு மருந்திட்டு

அவசரப் பொழுதில் வாகனம் நிறுத்தி
பள்ளிச் சிறுவர்க்கு வழிவிட்டு

தெருவின் ஒவ்வொரு கோடியிலும்
யாசகனின் பசி தீர்த்து

ஊருக்கு உழைக்கும் யோகம் கண்டு - பின்
எனக்கான அலுவலிலும் நுழைந்து

இன்முகம் மாறா புன்சிரிப்புடன்
ஒரு நாளைச் சுமுகமாய் முடித்து

என் வாகனத்தில் இருந்த அணில்
அதுவாய் இறங்கும்வரை பொறுத்து

அந்த இடைவெளியில் அந்தி வான் முகிலில்
மழலை நாட்களை விரித்து

கண்கள் பனித்து மென் தென்றல் சுகித்தபடி...
திடீரென அந்த அணில் "Excuse me boss...it's 5:30" என்றது

அதிர்ந்து விழித்தேன்...அருகில் கடிகாரம்
இது...இன்னுமொரு அவசரத் திங்கட்கிழமை

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

1 comment:

  1. Excellent one.. most suite for a weekend!!!..awesome..stuff !!!

    ReplyDelete