Tuesday, March 11, 2014

ரணப் பிரசவம்

நுரைகள் கூடி கேலி செய்தன என் நிஜத்தை
என் நிஜம் ஒளிந்து கொண்டது என் நிழலுக்குள்

ஒவ்வொரு துளியாய் வானம் விதைத்தது எனைத் தேடி
என் தொப்புள் கொடி சுற்றி இறந்து கிடந்தேன் என்னுள்ளே

ஒரு மின்னல் வந்து செய்து வைத்தது ரணப் பிரசவம்
என் சாம்பலில் இருந்தே எழுந்தேன் வாய்மை ஒளியோடு

நுரைகள் தெரித்துக் கலைந்தன என் நிழல் பார்த்து
என் நிஜத்தை அணைத்து உயர்த்தியது ஒரு மழை மேகம்

கலந்தேன் முகிலில் துளியாக - என்
வாய்மை ஒளியோடு - இனி
பொழிவேன் புவி மேல் தவறாமல் - என்
ஆன்மத் தமிழோடு!