விடியல் போல் வஞ்சகமின்றி
புன்னகை செய்வோம்
வெயிலிலா வெளிச்சமாய்
நண்பு கொள்வோம்
தாயின் மனம்போல்
கருணை செய்வோம்
பிறரில் நம்மைக் காண்போம்
நமக்கு நாமே நீதி செய்வோம்
யாவரும் ஒன்றென்ற பழமை மறவாத
புதுமை காண முரசறைவோம்
ஓம் ஓம் ஓம்
http://mashookpoetry.blogspot.com/
http://mashookrahman.com/
Thursday, December 30, 2010
Saturday, November 6, 2010
நட்பு
குளிர்காலத்தில் வியர்த்திருக்கும்
மலர்மேல் பனித்துளி
இதமான கதகதப்பாய்
தென்றலின் நட்பு!
http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/
மலர்மேல் பனித்துளி
இதமான கதகதப்பாய்
தென்றலின் நட்பு!
http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/
Friday, July 16, 2010
கவிதையின் கவிதை
எண்ணும் எழுத்தும் கண் - என
உண்டொரு செந்தமிழ்ப் பண் - இன்று
கவிதைகள் பிறப்பது பெண்களின் கண் - இதைச்
சகியுமோ என் தமிழ் மண்?!
சக்தியை இழக்குது சொல்
சமுதாயத்தை மாற்றிடும் இலக்கொன்று கொள்!
இலக்கில்லாத இலக்கியம் இல்
வெறும் காதலை இலக்கென கொள்ளாமல் நில்
பாதைகள் வகுத்துச் செல்
பல நன்மைகள் எழுத்தாலே ஆக்கிடக் கல் - இது
கவிதையின் கனிவான சொல்
தமிழை மதித்தால் எந்தன் சொல் வழி செல்!
http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/
உண்டொரு செந்தமிழ்ப் பண் - இன்று
கவிதைகள் பிறப்பது பெண்களின் கண் - இதைச்
சகியுமோ என் தமிழ் மண்?!
சக்தியை இழக்குது சொல்
சமுதாயத்தை மாற்றிடும் இலக்கொன்று கொள்!
இலக்கில்லாத இலக்கியம் இல்
வெறும் காதலை இலக்கென கொள்ளாமல் நில்
பாதைகள் வகுத்துச் செல்
பல நன்மைகள் எழுத்தாலே ஆக்கிடக் கல் - இது
கவிதையின் கனிவான சொல்
தமிழை மதித்தால் எந்தன் சொல் வழி செல்!
http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/
நிறைமதிக் குறள்
பார்த்த இரவு
பழகிய நிலவு
பார்த்துப் பழகிய நிழல்!
என் காலில் விழுந்த நிழல் கேட்டது
நிறைமதி மேலொரு குறள்!
முற்றம் தோன்றா நிறைமதி முற்றம்
கொள்ளும் மதியின் பெயர்
அகர முதலும் ஆகும் நிறைமதி
காதல் வளர் கவிக்கு
தோன்றா நிறைமதி பாடாக் கவிதைகள்
வாழா மதியிலி வான்
ஒற்றை நிறைமதி மல்லிகை ஏந்தும்
கற்றைக் குழல் இரவு
ஊட்டும் அமுதும் காட்டும் நிறைமதி
சேய்க்கு தாயது வாம்
பாரா ரோகம் தீர்க்கும் நிறைமதி
மாண்பார் செந்தமிழ்ப் பெண்
தேயா நிறைமதி யில்லை தேய்ந்தும்
தேயா நெடு நெஞ்சத்துள்
எத்தனை நூற்றும் தீரா நிறைமதி
கண்ணன் ஈந்த துகில்
ஏக்கம் தாக்கம் தருமாம் நிறைமதி
ஆக்கும் கவிதைத் தொழில்
மதிநிறை நிறைமதி தேயா நெஞ்சத்துட்
தமிழும் தீர்வது இல்
http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/
பழகிய நிலவு
பார்த்துப் பழகிய நிழல்!
என் காலில் விழுந்த நிழல் கேட்டது
நிறைமதி மேலொரு குறள்!
முற்றம் தோன்றா நிறைமதி முற்றம்
கொள்ளும் மதியின் பெயர்
அகர முதலும் ஆகும் நிறைமதி
காதல் வளர் கவிக்கு
தோன்றா நிறைமதி பாடாக் கவிதைகள்
வாழா மதியிலி வான்
ஒற்றை நிறைமதி மல்லிகை ஏந்தும்
கற்றைக் குழல் இரவு
ஊட்டும் அமுதும் காட்டும் நிறைமதி
சேய்க்கு தாயது வாம்
பாரா ரோகம் தீர்க்கும் நிறைமதி
மாண்பார் செந்தமிழ்ப் பெண்
தேயா நிறைமதி யில்லை தேய்ந்தும்
தேயா நெடு நெஞ்சத்துள்
எத்தனை நூற்றும் தீரா நிறைமதி
கண்ணன் ஈந்த துகில்
ஏக்கம் தாக்கம் தருமாம் நிறைமதி
ஆக்கும் கவிதைத் தொழில்
மதிநிறை நிறைமதி தேயா நெஞ்சத்துட்
தமிழும் தீர்வது இல்
http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/
Thursday, July 15, 2010
திரைகடல் ஓடி...
உறுமீன் வருமென்று காத்திருந்து
இளமை தொலைக்கும் கொக்குகள்
திரவியம் தேடி கூடு சேர்கையில்
அழைத்தது குழந்தை...
வாங்க தாத்தா!
இளமை தொலைக்கும் கொக்குகள்
திரவியம் தேடி கூடு சேர்கையில்
அழைத்தது குழந்தை...
வாங்க தாத்தா!
Tuesday, May 18, 2010
வலி
என் விரலில் நெருப்பு பட்டது
அம்மா ஊட்டி விட்டாள்!
நானே உண்ணும் நாள் வந்தது...
அப்போதுதான் வலித்தது
ஆறிய வடு!
அம்மா ஊட்டி விட்டாள்!
நானே உண்ணும் நாள் வந்தது...
அப்போதுதான் வலித்தது
ஆறிய வடு!
Tuesday, April 6, 2010
Subscribe to:
Posts (Atom)