Sunday, February 6, 2011

பிறவிப் பயன்

எங்கள் வீதியில் இறந்த யாரோ ஒருவருக்காக எழுதப் பட்ட கவிதை - 19/06/2003

அதிர அதிர அடித்து
ஆடிக் கொண்டிருந்தார்கள்
அவனுக்கு கேட்கவில்லை
அந்தோ பரிதாபம்!

இறந்துவிட்டதால் திணை மாறிவிடுமா?
"அவன்" அத்தமிக்கவில்லை என்பது என் கணக்கு

வாழ்வுக்கும் சாவுக்கும் நூலிழை தூரம்
அருகிருக்கும் இலக்குக்கு
பயணங்கள் வெகு தூரம்!

ஒரு புவி...கூறுகள் கோடி!
அத்தனைப் பிளவுக்கும்
றுமுனைக் கத்தி

ற்றலில், ஓலத்தில்
எத்தனை அன்புப் பிரவாகம்!!
மரித்த செவிகளுக்கு
கடைசி விருந்து!
ப் + இறப்பு = பிறப்பு
ஒரு மெய்யெழுத்து உள்ளடக்கும்
உயிர்ப் பொருள்!

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

2 comments:

  1. nice sir!

    specially thiz lines

    "ப் + இறப்பு = பிறப்பு
    ஒரு மெய்யெழுத்து உள்ளடக்கும்
    உயிர்ப் பொருள்!"

    ReplyDelete