Friday, August 16, 2013

புதிய சுகம்

பழைய துளி
புதிய சுகம்
இனிய மழை
இயற்கை வரம்

என் கவிதை நீ உடுத்தி
தண் மழையே நடை எடுத்தாய்
விண்கல்லாவது விழட்டுமென்று
வெயில் பொழுதில் தவம் கிடந்தேன்

எனை நனைத்தாய்
ஏன் நனைத்தாய்
உனை நினைத்தே
நிதம் நனைந்தேன்

கனவின் சுகம் நீ கொடுத்தாய்
கண் மழையாய் நீ வழிந்தாய்
பால் மழையே நீ சுரந்து
தாய்த் தமிழாய் மணக்கின்றாய்

உனக்கெனவே உருகுகின்றேன்
உன் நினைவில் உறைந்து நின்றேன்
நீயில்லா பொழுதுகளில் - என்
உயிர் துடிப்பில் சுரங்களில்லை

மென்மழையே கேளடி
என் சிறகும் நீயடி
உன் ஸ்பரிசம் தானடி - இவன்
கவி சுரக்கும் தாய்மடி

Wednesday, August 14, 2013

வரலாறு காணாத...



வரலாறு காணாத மௌனம்
முன்னேற்றம் பற்றிய கேள்விக்கு
வரலாறு காணாத வளர்ச்சி
பண வீக்கத்தில்
வரலாறு காணாத வீழ்ச்சி
பண்பாடு கலாசாரத்தில்
வரலாறு காணாத விழிப்புணர்வு
பயிலும் வயதில் பாலுணர்வுத் தூண்டுதலில்
வரலாறு காணாத விளைச்சல்
ஊழல் கழனியில் பணப் பெருச்சாளிகள்
வரலாறு காணாத இளைய சமூகம்
சொந்தத்தின் வேர் கூட தெரியாத நிலையில்
வரலாறு காணாத பாதுகாப்பு
இல்லாத சுதந்திரத்தை காபாற்றுதற்கு