Thursday, April 19, 2012

அறிவு என்பது?


எத்தனை சிந்தித்தாலும்
எதனை நிந்தித்தாலும்
அறிந்தாலும் இல்லையென்றாலும்
மொழிந்தாலும் மௌனம் காத்தாலும்
மாறாத மறை பொருள்
அது.. தீராத நிறையருள்!

பேசிப் பொழுதோட்டி
வாதித்து வகையற்று
பேதலித்து நில்லாமையே

இதுவும் கவிதை என்று கொள்ளாமையே

Sunday, April 15, 2012

ஆடுகளம்

மாணவர் தற்கொலை
ஆசிரியர் கைது!
மாணவர் கொலை - கைது!
சக மாணவர்!
ஆசிரியர் கொலை - மாணவர் கைது
இறந்தது.. கல்வியின் பயன்பாடு!