Wednesday, January 19, 2011

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

இறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறப்பும் ஒக்கும் - இதை
உய்த்துணர்ந்து அடக்கம் உற்றால்
அமரரில் உய்க்கும்

தாழ்மை உள்ள நிலமே - நீரை
நிரம்ப பிடிக்கும் - அதிலே
தாகமுள்ள உயிர்கள் பருகி
நிரம்ப படிக்கும்

அறிவைப் பகுக்கப் பகுக்க - அறிவு
அறிவே பிறக்கும்
மனிதனைப் பகுக்கும் அறிவை
மனிதம் மனிதம் பழிக்கும்

இன மத குலத்தால் உயர்வு
நவிலும் எவர்க்கும்
ஊழின் அம்பு எய்து வந்து
இழி மரணம் கொடுக்கும்

இந்த உண்மை உற்று உணர்ந்து
வாழும் எவர்க்கும்
யாண்டும் இடும்பை இல

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

No comments:

Post a Comment