Tuesday, October 21, 2008

முன்பனிக்காதல்

குளிர்பிறையின் கூர்நுனியில்
பனித்துளியாய் நின்றிருந்தேன்
அல்லி அவள் மடியினிலே
விழுவதற்காய் தவமிருந்தேன்
இரவின் வெளி என் மனதின் தாகத்தில் தீ வார்க்க,
பிறை வெளிச்சம் போதவில்லை
என்னவளின் முகம் பார்க்க…
மொட்டாய் நின்றவள் மலர்ந்தாள்
தன் இதழ்களை திறந்தாள்
மின்னல் கொடியினில் இறங்கி
அவள் மனதினில் நிறைந்தேன்