Tuesday, December 15, 2009

கண்ணீரின் காரணம்

தாயின் கதகதப்பும் இலை நுனியின் மழையும்
சிசுவின் புன்னகையும் தந்தையின் கடைசிக்குரலும்
நட்பின் நினைவும் மனவானில் புகையாக
கனக்கும் விழி ஏதோ உறுத்தல் தவிர்க்க
இமைக்கையில் சிந்தும் மழை ...

இமையும் விழியும் வழியும் துளியும்
இதழின் மொழியும் அறிவதில்லை
மௌனத்தில் துவங்கி கன்னத்தில் நடந்து
காலத்தில் கலக்கும் கண்ணீரின் காரணம்

Monday, May 11, 2009

இசைக்கு இசை

இசைக்கு இசை . திரு ஏ. ஆர். ரஹ்மான் அவர்களின் ஆஸ்கார் வெற்றியை போற்றி எழுதிய கவிதை தொகுப்பு

Wednesday, February 25, 2009

எனது முதல் கவிதை தொகுப்பு

எனது முதல் கவிதை தொகுப்பு வெளியாகிறது. தலைப்பு - மழையுதிர் காலம்