Wednesday, January 26, 2011

ஐயக் கருக்கலே

தேயிலைமீது பனித்துளி
தேநீர் சுமக்கும் தென்றல்!
மேகம் நடத்துகின்ற முழு அடைப்பில்
தன்னைப் பதித்தன கண்கள்

பனித் திரையில் தென்றல் பரியில்
உத்திரச் சூரியக் கதிர் இறங்க
பொன்னொளி வெள்ளம் நெஞ்சிலடித்ததும்
நிலவை மறந்தது நெஞ்சு - விடியலில்
விழுந்த மனதும், மிதக்கின்ற மஞ்சு!

இயற்கை ஓவியன் கழுவித் தெளித்த
தூரிகை தந்த விருந்தோ?! - இது
மயக்கமளித்து மனநோய் தீர்க்கும்
அரிய வகையின் மருந்தோ!!

கொல்லன் ஊதிய தங்கத் தூசு
பனியில் கலந்ததுவோ!!
என் விரல்கள் எய்தும்
வரிகள் கிழித்த கிழி தான் சிந்திடுதோ!!

ஐயக் கருக்கலே
விடிந்து கருத்தைச் சொல்
மையலில் விழுந்தது மனது!

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

No comments:

Post a Comment