Sunday, February 27, 2011

காட்டி மறைத்த வழி...

நாற்திசை காட்டியோடு நாற்சந்தி
அதன் எல்லா கரத்திலும்
ஒரே ஊரின் பெயர்!

எல்லா திசையிருந்தும் வந்த பாதச் சுவடுகள்
அந்தக் கைகாட்டியின் காலடியில் அத்தமித்தன

மனம் கர்வம், கவிதை இரண்டுமிழந்தது
தடித்த மௌனத்தின் நிழல்
ஒரு பேரொலி அறைந்த காயத்தோடு

ஒரு வேளை...
திசைகாட்டி இல்லையென்றால்
நடந்திருப்பேன்
இன்னும் நம்பிக்கையோடு

மனத்தில் இன்னுமொரு கேள்வி மிச்சம்
நடை வண்டியோடு கையேடு எதற்கு?!

http://mashookpoetry.blogspot.com/
http://mashookrahman.com/

Thursday, February 10, 2011

அட்டை

மௌனமும், கொஞ்சம் புன்னகையும் கலந்து
பூங்கொத்து ஏந்திச் சிரித்தன அந்தக் குழந்தைகள்

இதயத்தின் வடிவம், இன்னபிற நிறத்திலும்
பிறப்புக்கும் நட்புக்கும் நெடுநாளைய உறவுக்கும்
உள்ளொன்று வைத்து நலம் விசாரிக்கும்
உத்தி நிறைந்த வரி விளம்பரங்கள்!

காதல் அட்டை வாங்கினர்
காதல் அட்டைகள்!

முதியோருக்கான அட்டைகள்
அழுக்கேறிய "பழைய சரக்கு"-வாஸ்துப்படி
அக்கினி மூலையில்

அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்!

http://mashookpoetry.blogspot.com/
http://mashookrahman.com/

Sunday, February 6, 2011

பிறவிப் பயன்

எங்கள் வீதியில் இறந்த யாரோ ஒருவருக்காக எழுதப் பட்ட கவிதை - 19/06/2003

அதிர அதிர அடித்து
ஆடிக் கொண்டிருந்தார்கள்
அவனுக்கு கேட்கவில்லை
அந்தோ பரிதாபம்!

இறந்துவிட்டதால் திணை மாறிவிடுமா?
"அவன்" அத்தமிக்கவில்லை என்பது என் கணக்கு

வாழ்வுக்கும் சாவுக்கும் நூலிழை தூரம்
அருகிருக்கும் இலக்குக்கு
பயணங்கள் வெகு தூரம்!

ஒரு புவி...கூறுகள் கோடி!
அத்தனைப் பிளவுக்கும்
றுமுனைக் கத்தி

ற்றலில், ஓலத்தில்
எத்தனை அன்புப் பிரவாகம்!!
மரித்த செவிகளுக்கு
கடைசி விருந்து!
ப் + இறப்பு = பிறப்பு
ஒரு மெய்யெழுத்து உள்ளடக்கும்
உயிர்ப் பொருள்!

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/