Sunday, January 9, 2011

இனி...

நிலவைத் தான் விரும்புமென்று
அல்லியை கதிர் எரிப்பதில்லை
அல்லியின் நாணத்தை
அற்பமென்று பழிப்பதில்லை

அல்லிக்கொரு குளம்
தாமரைக்கொரு குளமென
யாரும் தோற்றி வைப்பதில்லை
எங்கு எதன் பார்வை
அன்பால் மிகுமோ...
அங்கு அது வாழப் புகும்
அன்பைக் கரு கொண்டு
வழிந்து ஓடும் நதிதானே
உயிர்கள் கால் நனைக்கும் யுகம்!

தழுவிக் கலைகின்ற
காலத்தின் அற்ப சுகம்
வியர்வை உலருதற்குள் மறையும்
உயிருக்குள் உயிர் விழித்துப்
பூத்திருந்த அன்பேதான்
ஊழின் முடிவுவரை உறையும்

இன்பம் சிரிதன்று
பேரின்பம் ஒன்றென்று
அன்பைக் குடித்த உயிர் உரைக்கும்

தன ஒளியில் பாதியினை
நிலவிற்கு தந்த கதிர்
அல்லியை எப்படிப் பழிக்கும்?!
இனி...
காலம் அன்பைப் படிக்கும்

http://mashookrahman.com/
http://www.mashookrahman.blogspot.com/
http://www.mashookpoetry.blogspot.com/

No comments:

Post a Comment