Saturday, May 21, 2011

நுரை சேர்க்கும் தவம்!

யௌவனத் தேசத்து மகரந்தம்
வண்ணத்துப் பூச்சியின் கால்களில்
அது சிந்திய மனவானில்
ஆயிரம் வண்ணத்து வானவில்

மழையின் வாசம் மனமெங்கும்
மழலைக் காடு எழில் மின்னும் - என்றோ
எண்ணி வைத்த விண்மீன்கள்
வந்து நிற்கும் பகலில்
எண்ணம் மூச்சில் கலந்து
கொஞ்சம் சுற்றும் பால்வெளியில்!

யௌவனம் போல இல்லை
மழலைக்கும் முடிந்தது எல்லை
பொழிந்து கொண்டே ஓடிவிட்ட
ஒற்றை வான்முகில்போல
கரைகின்ற காலம் வரைகின்ற மாயம்
தருகின்ற யாவும் சுகம்

ஒரு தருணத்தில் நின்று
காலத்தைப் பார்ப்பது
அலையின் நுரை சேர்க்கும் தவம்!

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

No comments:

Post a Comment