Tuesday, May 10, 2011

வேரில் பூத்த மலர்

ஒவ்வொரு மழைப் பொழுதையும் ஒரு கவிதையாய் வடிப்பது என் வழக்கம். அப்படி ஒரு நாள் மழை தூறலாய் விழுவதை வருணித்து எழுதிய கவிதை இது!

மாலை மழை வானத்தில்
மந்தகாசத் தூறல்
பூமீது தேன் குதிக்கும்
மின்னல் வேகச் சாறல்!

முத்தமாக விழும் சொட்டு
வாய் திறக்கும் முகில் மொட்டு
வாசம் காற்றில் புது மெட்டு
பாடும் காதல் தொட்டு

பூ முகிழ்த்தும் மழை முத்தம்
பா முகிழ்த்தும் இடிச் சத்தம்
குளிரில் ஆவல் கொண்ட மண்ணில்
வேர் பூ பூக்கும்!

சிந்தித் தெறிக்கும் வானவில்லை
சந்திப் பிழைகள் நீக்கிவிட்டு
சந்தமாக்கும் தொழிலெனக்கு
முகிலா மழை கொட்டு!

வேலி  பார்த்துப் பெய்யாமல்
காணி காக்கும் பொது மழையே
காத்திருந்த மனத் தரிசில்
கவிதை நெரிசல்

வேறெவர்க்கும் சொல்லாதே
வேந்தன் தந்த வரிகளிதை
தேவையுள்ள தருமிக்கே
வேண்டும் பரிசில்!



2 comments:

  1. indha KAVIDHAI migavum nandraga ullathu
    your student G.manikandan B.sc "c" section

    ReplyDelete