Monday, June 27, 2011

வாசிக்கப் படாத வரி

ரசித்த கவிதை
ருசித்த கவிதை
சுகம் சேர்த்த கவிதை
சோகம் தீர்த்த கவிதை
மனம் நனைத்த கவிதை
வருடிய கவிதை
நெருடிய கவிதை
திருடிய கவிதை
எல்லாவற்றிலும் எளிதாய் மறப்பது
கவிஞன் எனும் வாசிக்கப் படாத வரி

No comments:

Post a Comment