Tuesday, March 1, 2011

ஆத்தா!

தூரத்துல கொலவயிட்டு
நடவுக் கன்னு நட்டு வெச்சு
கூலிக்கு மாரடிக்கும்
மயிலு, குயிலு, சிட்டு, முப்பாத்தா!

மார் நனைச்சி பசியடங்கி
கண் வளரும் புள்ள
நோவாம தூங்கிட
தாலாட்டு படிச்சிருந்தா முப்பாத்தா

நெடுநாளா நடு மத்தியில
கெள விரிச்சி வேப்பமரம்
தொட்டில் கட்டிப் போட எசவாயிருக்கு

அடிமரத்துல சந்தனம்
அது மத்தியில குங்குமம்
மஞ்சத் துணி மரத்திடுப்புக்கு
சூலம் ரெண்டு பாதுகாப்புக்கு

எளசுங்க, நேந்து கட்டும்
தொட்டில்கள ஏத்துக்கிட்டு
புள்ள வரமும் குடுத்து
கொஞ்சிகிட்டிருக்கா இந்த
செல்ல ஆத்தா!

No comments:

Post a Comment