Sunday, February 27, 2011

காட்டி மறைத்த வழி...

நாற்திசை காட்டியோடு நாற்சந்தி
அதன் எல்லா கரத்திலும்
ஒரே ஊரின் பெயர்!

எல்லா திசையிருந்தும் வந்த பாதச் சுவடுகள்
அந்தக் கைகாட்டியின் காலடியில் அத்தமித்தன

மனம் கர்வம், கவிதை இரண்டுமிழந்தது
தடித்த மௌனத்தின் நிழல்
ஒரு பேரொலி அறைந்த காயத்தோடு

ஒரு வேளை...
திசைகாட்டி இல்லையென்றால்
நடந்திருப்பேன்
இன்னும் நம்பிக்கையோடு

மனத்தில் இன்னுமொரு கேள்வி மிச்சம்
நடை வண்டியோடு கையேடு எதற்கு?!

http://mashookpoetry.blogspot.com/
http://mashookrahman.com/

No comments:

Post a Comment