Sunday, March 20, 2011

அநாதை

உறவற்ற வார்த்தை
உருகொண்டு வாழும்
பிஞ்சாய் பிறந்தவுடன்
பெயராகிப் போகும்!

விதிஎழுதும் பெயராய்
பிறப்போடு ஒட்டும்
அர்த்தமிதற்கென்ன
தனி மரக்காடு?!

தவறிப் போகும் உயிர்கள்
தவிப்புக்கு கொடுக்கும்
உன்னத உயிலோடு
பிஞ்சின் பெயர் சேரும்

சில நிமிட ஆசை
சீர்குலைக்கும் சிசு வாழ்வை
கருவோடு கலைவார் - இல்லை
தெருவோடு அலைவார்

தமிழென்னும் அமுதில்
ஒரு துளி விஷமா?
இந்த வார்த்தையும் வேண்டாம் இனி

2 comments: