Friday, August 16, 2013

புதிய சுகம்

பழைய துளி
புதிய சுகம்
இனிய மழை
இயற்கை வரம்

என் கவிதை நீ உடுத்தி
தண் மழையே நடை எடுத்தாய்
விண்கல்லாவது விழட்டுமென்று
வெயில் பொழுதில் தவம் கிடந்தேன்

எனை நனைத்தாய்
ஏன் நனைத்தாய்
உனை நினைத்தே
நிதம் நனைந்தேன்

கனவின் சுகம் நீ கொடுத்தாய்
கண் மழையாய் நீ வழிந்தாய்
பால் மழையே நீ சுரந்து
தாய்த் தமிழாய் மணக்கின்றாய்

உனக்கெனவே உருகுகின்றேன்
உன் நினைவில் உறைந்து நின்றேன்
நீயில்லா பொழுதுகளில் - என்
உயிர் துடிப்பில் சுரங்களில்லை

மென்மழையே கேளடி
என் சிறகும் நீயடி
உன் ஸ்பரிசம் தானடி - இவன்
கவி சுரக்கும் தாய்மடி

No comments:

Post a Comment