கபடதாரிகள்
நாடகத்தில்
உண்மையாளன்தான்
கோமாளி
அவன் சொல்லும்
உண்மைக்கு
சிரித்தே பழகிய மனித
கூட்டம்தான் ஏமாளி!
அவன் விழுவதைப்
பார்த்து
சிரிக்கும்
கூட்டத்தின் கருத்தில்
அது பொழுதுபோக்கு!
இது விதையில்
சிதையுண்டு
வளர்ந்து நிழலாடும்
உலுத்து நிற்கின்ற தேக்கு
அவன் விழுந்தும்
எழுகிறான்
இவன் சிரித்து
விழுகிறான்
இது மனித மந்திகளின்
குறை மதிச்
சிந்தையின் நீட்சி
பிறன் வலியில் அகமகிழ்ந்து
உழன்று கிடப்பதே
மனித இனத்தின் பெரும் வீழ்ச்சி!
No comments:
Post a Comment