Sunday, December 30, 2012

புத்தாண்டு

இந்த வருட நாட்குறிப்பை
அன்பளிக்க வேண்டாம்
இயற்கைமீது அன்பு கொண்டோர்
அதனை வாங்க வேண்டாம்

புதிய நூல்கள் ஒருவர் வாங்கி
குடும்பம் கூடி வாசிப்போம்
பகிர்வில் அறிவும் அன்பும் பெருகும்
"பண்பு இலவசம்" யோசிப்போம்

மலிவு விலையில் கிடைக்கும் மதுவில்
விலையில்லா உயிரை இழக்காமல்
சேர்த்த பணத்தை பொதுவில் வைத்து
பகிர்ந்து வாழப் பழகுவோம்

அடுக்குமாடி விடுதிகளில்
கற்பை ஏலம் போடாமல்
ஆலயங்களில் கண்கள் மூடி
ஆண்டவனிடம் வேண்டுவோம்
2013ல் எங்களையும் இந்தியாவையும்
இறைவா காப்பாற்று - எங்களிடமிருந்து

No comments:

Post a Comment