Friday, July 16, 2010

கவிதையின் கவிதை

எண்ணும் எழுத்தும் கண் - என

உண்டொரு செந்தமிழ்ப் பண் - இன்று

கவிதைகள் பிறப்பது பெண்களின் கண் - இதைச்

சகியுமோ என் தமிழ் மண்?!

சக்தியை இழக்குது சொல்

சமுதாயத்தை மாற்றிடும் இலக்கொன்று கொள்!

இலக்கில்லாத இலக்கியம் இல்

வெறும் காதலை இலக்கென கொள்ளாமல் நில்

பாதைகள் வகுத்துச் செல்

பல நன்மைகள் எழுத்தாலே ஆக்கிடக் கல் - இது

கவிதையின் கனிவான சொல்

தமிழை மதித்தால் எந்தன் சொல் வழி செல்!

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

No comments:

Post a Comment